Saturday, January 06, 2007

"செத்தாலும்" - சிவஸ்ரீயின் சிறுகதை

காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் படைப்பாளிகளுக்கான புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை பெற்றுள்ளது திருமதி சிவஸ்ரீ அவர்கள் எழுதிய "செத்தாலும்" சிறுகதை. இக்கதை காலச்சுவடு ஆகஸ்ட் 2006 இதழில் பிரசுரமாகியுள்ளது. சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிக்கையில் ( டிசம்பர் 24, 2006 ) முதல் பாதி பிரசுரமாகியுள்ளது. அடுத்த பாதி வருகிற ஞாயிறு ( ஜனவரி 7, 2007 ) வர இருக்கிறது.கதையின் கருவாக தற்கொலை" யினை ஆசிரியர் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இக்கதையினைப் படிக்கும் எவரும் தப்பித் தவறிக்கூட தற்கொலை முடிவுக்குப் போகமாட்டார். அப்படி ஒருவேளை செத்தாலும் (கதைத்தலைப்பு) கதையில் கூறியுள்ளபடி சாக மாட்டார். அவ்வளவு அடர்த்தியாக கதையின் களம் அப்படி இப்படி நகராமல் "தற்கொலை" யினால் படும் அவசஸ்த்தைகளை அணுஅணுவாக இம்மி பிசகாமல் சொல்லியிருக்கிறார் சிவஸ்ரீ. சரளமான பேச்சு நடையில் அவஸ்த்தையை அனுபவித்த அந்தப் பெண்ணே கூறுவதாக அமைத்திருப்பது மிக மிக அருமை! இம்முயற்சியினால் படிக்கும் ஒவ்வொருவரும் தாமே அப்படி அவஸ்த்தைப் ப்ட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு தாக்கம் ஏற்படுகிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல சிறுகதை அனுபவம். தொடர்ந்து சிவஸ்ரீ இன்னும் பல படைப்புக்களை படைக்க வாழ்த்துவோம்!!